பதவி உயர்வுப் பிரிவு

 

இல 1955/22 மற்றும் 2016.02.25 ஆம் திகதிய அதி விசேடமான வர்த்தமானி அறிவித்தல் மூலம் திருத்தப்பட்ட இல 1941/41 மற்றும் 2015.11.20 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ள மற்றும் 1989/29 மற்றும் 2016.01.29, 1990/24 மற்றும் 2016.10.27, 1992/07 மற்றும் 2016.11.07 எனும் அதி விசேட வர்த்தமானிப் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டுள்ள அரசாங்க சேவை ஆணைக்குழுவினது தத்துவங்கள் கையளிக்கப்படாத அரசாங்க உத்தியோகத்தர்களின் (அமைச்சுச் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், மாகாண அரச சேவை உத்தியோகத்தர்கள், நீதிச் சேவை உத்தியோகத்தர்கள் நீங்கலாக) பதவிகளுக்கு நியமித்தல் / பதவி உயர்வுகள் தொடர்பிலான பின்வரும் பணிகள் அரசாங்க சேவை ஆணைக்குழுவின் பதவி உயர்வுப் பிரிவினால் நிறைவேற்றப்படுகின்றது.

பதவி உயர்வுப் பிரிவின் செயற்பாடுகள்

  • அங்கீகரிக்கப்பட்ட சேவைப் பிரமாணக் குறிப்பு / ஆட்சேர்ப்பு திட்டம் / பதவி உயர்வுத் திட்டம் ஆகியவற்றின் பிரகாரம் பதவியுயர்த்தல்.
  • நிறைவேற்றுத் தரத்தைச் சேர்ந்த தரம் 1 மற்றும் விசேட தரத்தின் உத்தியோகத்தர்களை (சேவை மூப்பு / கட்டமைக்கப்பட்ட நேர்முகப் பரீட்சை மூலம் ) பதவிகளுக்கு நியமித்தல்.
  • பிரதேச செயலாளர் பதவிக்கு நியமித்தல். (நிரந்தர, பதில் கடமை, கடமை நிறைவேற்றல்)
  • மேற்குறிப்பிட்ட பணிகள் தொடர்பில் அரசாங்க சேவை ஆணைக்குழுவினால் வழங்கப்படும் கட்டளைகள் / தீர்மானங்களுக்கு எதிராக நிர்வாக மேன்முறையீட்டு நியாய சபைக்கு மற்றும் உயர் நீதிமன்றத்தில் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தொடுக்கப்படும் வழக்குகளுக்கு ஏற்புடைய அவதானிப்புரைகள் உள்ளடக்கப்பட்ட அறிக்கைகளை தயாரித்தல் / வழங்குதல் மற்றும் ஒத்துழைத்தல்.
  • மேற்குறிப்பிட்ட விடயங்களுக்கு ஏற்புடையதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு, ஒம்புஸ்மனிடம் சமர்ப்பிக்கப்படும் மேன்முறையீடுகளுக்கு அறிக்கைகளைத் தயாரித்தல் / வழங்குதல் மற்றும் பொதுமனுக்குழுவில் ஆஜராகுதல்.
  1. சுகாதார சேவைக்குழு மற்றும் கல்விச் சேவைக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள தீர்மானங்களுக்கு எதிராக அரசாங்க சேவை ஆணைக்குழுவுக்குச் சமர்ப்பிக்கப்படும் மேன்முறையீடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுத்தல்.
  2. பதவி உயர்வுகளுக்கு ஏற்புடையதாக தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கிடைக்கப்பெறும் கோரிக்கைகள் தொடர்பில் நடவடிக்கை எடுத்தல்.