|
அடிக்கடி எழுப்பப்படும் வினாக்கள்
இல்லை. அது ஒரு சுதந்திர ஆணைக்குழு. எனினும் அது தனது தத்துவங்களையும் செயற்பாடுகளையும் செயற்படுத்துவது சம்பந்தமாக பாராளுமன்றத்துக்கு பதில் கூறக்கூடியது ஆகும்.[ பார்க்க: அரசியலமைப்பின் 17ஆவது திருத்தத்தின் 55(5) ஆம் உறுப்புரை]
* அவ்வாறான கட்டளை கிடைத்து 04 வாரங்களுக்குள் நிருவாக மேன்முறையீட்டு நியாய சபைக்கு முறையீடு செய்யலாம். [பார்க்க அரசியலமைப்பின் 59(2) 17ஆம் திருத்தம் மற்றும் நிருவாக மேன்முறையீட்டு நியாய சபை சட்ட விதிகள் இல. 4/2002 இன் 4ஆம் பகுதி ] அல்லது* உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்யலாம் [பார்க்க அரசியலமைப்பின் 126ஆம் உறுப்புரை ]
* அரசியலமைப்பின் 17ஆம் திருத்தத்தின் 61(அ) உறுப்புரையில் கீழ் கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. “126ஆம் உறுப்புரையின் (1) ஆம் (2)ஆம் (4)ஆம் அத்துடன் (5)ஆம் ஏற்பாடுகளுக்கமைவாக, நீதிமன்றம் அல்லது நியாய சபை எதுவும் இவ் அத்தியாயத்தின் கீழ் அல்லது வேறேதேனும் சட்டத்தின் கீழ் ஆணைக்குழுவுக்கு அளிக்கப்பட்ட அல்லது அதன் மீது சுமத்தப்பட்ட அல்லது ஒரு குழுவுக்கு அல்லது பகிரங்க அலுவலருக்கு கையளிக்கப்பட்ட ஏதேனும் தத்துவத்தை அல்லது கடமையைப் பின்பற்றி ஆணைக்குழுவால், ஒரு குழுவினரால் அல்லது எவரேனும் பகிரங்க அலுவலரால் ஆக்கப்பட்ட ஏதேனும் கட்டளையை அல்லது முடிவை விசாரிப்பதற்கான, அதன்மீது எடுத்து மொழிவதற்கான அல்லது அதனை எவ்வகையிலேனும் கேள்விக்குட்படுத்துவதற்கான தத்துவத்தை அல்லது நியாயத்தினை கொண்டிருக்கலாகாது.
அரசியலமைப்பின் 17ஆம் திருத்தம், 58(1) உறுப்புரைக்கமைய உங்களுக்கு அரசாங்க சேவை ஆணைக்குழுவின் கட்டளைக்கு எதிராக முறையீடு செய்யும் உரிமை உள்ளது.
மேற்கூறப்பட்ட முறையீடுகள் அரசாங்க சேவை ஆணைக்குழுவுக்கு குறிப்பிட்ட கால எல்லைப் பகுதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென்பதுடன் தாபன விதிக்கோவையின் அத்தியாயம் XXVIII, இன் பிரிவு 5 மற்றும் 6 மற்றும் அத்தியாயம் XXVIIIஇன் பிரிவு 12, 26 மற்றும் 37யும், அரசாங்க சேவை ஆணைக்குழுவின் நடைமுறை விதிகளின் அத்தியாயம் XX ஐ கவனத்தில் கொள்ளவும்.
|